மனித வாழ்க்கையின் பயன் #231

சமுதாயத்திற்கு பங்களிப்பதும் அதனால் ஏற்படும் தாக்கமுமே மனித வாழ்க்கையின் அளவீடாகும்.

குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பங்களித்து பலர் வாழ்க்கையை மேம்படுத்துவதன் மூலம் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, பலர் நினைவில் இறந்த பிறகும் வாழ்வது தான், வாழ்ந்ததிற்காக ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம், இதை தவிர மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கு கிடைக்கும் பலன் ஒன்றும் இல்லை.

வாழ்க்கைப் பயன்: தானம் கொடுத்து புகழ் பெறுவது.

மனித உயிர்க்கு மதிப்பு எனப்படுவது ஈவதினால் உண்டாகும் புகழொடு வாழ்வதனால் ஏற்படும்.

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

The lasting essence of one’s life lies in the enduring contributions made to others, and the resulting legacy becomes a significant measure of an individual’s time on earth. #231

life’s purpose: to influence the world in a way that echoes through time, shaping future generations even in our absence.

Legacy: காலங்கள் கடந்து எதிரொலிக்கும் “தாக்கத்தை” உலகில் ஏற்படுத்து, உன் காலத்திற்கு பிறகும் எதிர்கால தலைமுறைக்கு கைகொடுக்கும்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
(அதிகாரம்:புகழ் குறள் எண்:231)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.