இந்த மூன்றும், துன்பங்களின் ஆரம்பம் #360

பேராசை, கோபம், மயக்கம் ஆகிய மூன்றும் ஒரு தெளிவில்லாத மனநிலையை உருவாக்கும், அந்த மனநிலையில் எடுக்கும் முடிவுகள் பகுத்தறிவை (rationality) விட உணர்ச்சியின் பக்கம் சாய்ந்து பல துன்பங்களுக்கு வழி வகுக்கும்.

பேராசை = எல்லாவற்றையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
கோபம் = விரும்பியது நிறைவேறாவிட்டால் உண்டாகும் சீற்றம்
மயக்கம் = அகம்பாவத்தினால் ஏற்படும் மதி மயக்கம்

A clouded mind, born of intense interest followed by anger and delusion, leans toward emotion rather than rationality and serves as the fundamental cause of all trouble. #360

Jealousy kills peace
Anger kills wisdom
Ego kills growth
laziness kills ambition
Doubt kills confidence
Fear kills dreams.
(now read that right to left)

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:360)

ஒருவனுக்கு ஆணவத்தால், எல்லாம் எனக்குத் தெரியும் எனும் மனோபாவம் தோன்றும்போது -> ஆராய்ந்து பார்க்கும் திறன் குறைந்து -> அறியாமை பெருகும் -> மூடத்தனத்துக்கும் + முரட்டுத்தனத்துக்கும் -> நல்லோர் உறவு கிடைக்காது -> தீய வழியில் செல்லத் தொடங்குவர் -> வாழ்க்கை துன்பமயமாகும் -> எந்நேரமும் தற்காப்பைப் பற்றியே எண்ணி அஞ்சி வாழும் இருள் வாழ்க்கை நடத்துவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.