வாழ்வியிலில் உச்சபட்ச சாதனை? #982

அறிவு, செல்வம், கலை போன்ற பல்வேறு தேடல்களின் வழியாக காலப்போக்கில் உருவாகின்ற பண்படுத்தப்பட்ட மனமேகுணம் ஆகும், இதுவே ஒரு தனிமனிதனின் வாழ்வியிலில் உச்சபட்ச சாதனையாகும். சான்றோருக்கு இந்த “குணம்” தான் அவர்களின் மகத்துவம் வேறு எதுவும் அல்ல.

தினசரி அனுபவங்கள் மூலம் உருவாகும் “குணம்” (பண்புகளின் கூட்டு )தான் ஒருவரின் உச்சபட்ச தனிமனித சாதனை, அந்த குணத்தை பொறுத்தே அவருக்கு வேண்டியது கிடைக்கிறது என்பதை உணர்ந்த சான்றோர் கல்வி, அறிவு, செல்வதைவிட குணத்தையே அவர்களின் முதன்மை சொத்தாக கருதினர்.

எத்தனை சிறப்புகள் இருந்தாலும் சான்றோருக்கு சிறப்பு அவர்களின் குணமே.

குணநலம் சால்பிற்கு அழகு.

The culmination of character, developed through the cultivation of one’s mind across various pursuits such as wealth, knowledge, and art, represents the pinnacle of an individual’s worldly achievements. For Saandror ^, the paragon, this attained character stands as the ultimate reward of one’s onward journey. #982

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஅம் அன்று
(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:982)

👧👦 குழந்தைகளே, நம் வாழ்க்கையில் நமக்கு கிடைப்பது எல்லாம் நம்முடைய குணத்தின் பலன்தான்.

அதனால்தான் புத்திசாலிகள் குணத்தை வளர்ப்பதிலே அதிக அக்கறை காட்டினார்கள்.

👉 குணம் எப்படிக் கட்டப்படுகிறது தெரியுமா?
நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் பதில் மூலமே நம்முடைய குணம் உருவாகிறது.


எடுத்துக்காட்டு (Example):

  1. யாராவது சண்டை போட்டால் – நாமும் சண்டை போட்டால் குணம் கோபமாகும்.
    ஆனா சும்மா அமைதியாக விட்டுவிட்டால் குணம் அமைதி ஆகும்.
  2. வீட்டில் உதவி கேட்கும்போது – நாம் “இல்லை” என்று விட்டுவிட்டால் சோம்பேறி குணம் வளரும்.
    ஆனா உதவி செய்தால் பொறுப்பு குணம் வளரும்.
  3. பள்ளியில் தோல்வி வந்தால் – துவண்டு விட்டால் பலவீன குணம் வரும்.
    மீண்டும் முயற்சி செய்தால் தன்னம்பிக்கை குணம் வளரும்.

🌟 சுருக்கமாக:
நாம் ஒவ்வொரு நாளும் எடுக்கும் சிறிய தேர்வுகள் தான், நம்முடைய குணத்தையும், வாழ்க்கையையும் அமைக்கின்றன.

கருத்து: நமக்கு ஏற்படும் அனுபவங்களும், நமது பதில்களும் (மனப்பான்மை + நெறிமுறை + செயல்கள்)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.